search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யலூர் சந்தை"

    • வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தினசரி தக்காளி சந்தை மாலையில் நடைபெற்று வருகிறது. மேலும் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அப்போது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிழவனூர், கல்பட்டிசத்திரம், நடுப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நாட்டுகோழி, சேவல் மற்றும் ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அடுத்தவாரம் புரட்டாசிமாதம் தொடங்க உள்ளதால் பெரும்பாலோனார் விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் அசைவ உணவுகளை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.

    இருந்தபோதும் விற்பனை ஓரளவு அதிகமாகவே நடைபெற்றது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகரித்தது. 10 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.

    அய்யலூர் வாரச்சந்தையில் போதிய அளவு இடம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையோரம் அதிகளவில் குவிகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும் குறித்த நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியாமல் டிரைவர்களும் அவதிஅடைகின்றனர். சந்தை உரிமையாளர்கள் வசூல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
    • ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சாதாரணமாக ரூ.5000-க்கு விற்பனையாகும் ஆடுகள் இன்று ரூ.7000 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

    ஆனால் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரூ.400-க்கு விற்கப்படும் கோழி ரூ.300 மற்றும் அதற்கு கீழ் விற்பனையானது. வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு கோழிகளை விற்றுச்சென்றனர். இதேபோல் சேவல்களும் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டன.

    கட்டுசேவல்கள் ரூ.2000 முதல் ரூ.10000 வரை விற்கப்பட்டது. மொத்தத்தில் இன்று மட்டும் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

    முன்னதாகவே மணப்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சந்தை நடத்தப்பட்டதால் அங்கு அதிகளவு வியாபாரிகள் சென்றுவிட்டனர். இதனால் ரூ.4 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவாகவே ஆடுகள் விற்பனையாகின.

    நேற்று இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சந்தைப்பகுதி சகதிகாடாக இருந்தது. இதனால் சாலையோரங்களிலேயே வைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக தீபாவளிக்கு முன்னதாக பண்ணை அமைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்குவது வழக்கம். அதனை சந்தையில் வைத்து வழங்கி அவர்களுக்கு உணவும் வழங்கினர். இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் ஒட்டன்சத்திரம் சந்தையிலும் இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆட்டுச்சந்தைக்கு 200 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். இன்று சுமார் 1000 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் கிடா எனப்படும் கருப்பு நிற ஆடு ரூ.25ஆயிரம் வரை விற்பனையானது.

    மற்ற ஆடுகள் ரூ.10ஆயிரம் வரையிலும், ஆட்டுக்குட்டி ரூ.2000 முதல் விற்பனையானது. பழனி, தொப்பம்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். மார்க்கெட்டில் இன்று சுமார் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×