search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எஸ்.பி.வேலுமணி"

    கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். #coimbatorestudentdeath

    கோவை:

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்த கல்லூரி மாணவி லோகேஸ்வரி இறந்த சம்பவம் எதிர்பாராத செயல். மிகவும் வருந்தத்தக்கது. டி.வி.க்களில் வெளியான வீடியோவை பார்க்கும் போது, அந்த கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்ட லோகேஸ்வரி மாடியில் இருந்து கீழே குதிக்கவே தயங்குவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவருக்கு கீழே குதிக்க விருப்பம் இல்லை. அதன் பின்னரும் பயிற்சியாளர், அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதனால் கீழே விழுந்த போது அந்த மாணவியின் தலையில் அடிபட்டதால் அவர் இறந்து உள்ளார். 

    இது போன்ற சம்பவம் எந்த கல்லூரியிலும் நடக்கக்கூடாது. நான் அந்த வீடியோவை பார்த்ததும், போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த பயிற்சியாளரை கைது செய்து உள்ளனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அத்துடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சி நடத்தும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் பயிற்சி நடத்தக்கூடாது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்த பிறகு தான் பயிற்சியை நடத்த வேண்டும்.

    மேலும் அதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு விருப்பம் உள்ளதா? என்று கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிற்சி கொடுக்க வேண்டும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி இறந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிவாரண தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வழங்கினார். அவருடன் கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோரும் சென்று இருந்தனர். #coimbatorestudentdeath

    சென்னையில் டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். #MinisterVelumani #DrikingWater

    சென்னை:

    ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடை பெற்றது.

    இந்த கருத்தரங்கில் குடிநீர் திட்டப்பணிகளில் குளோரின் பயன்பாடு குறித்த புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு பேசினார். இதில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருத்தரங்கம் முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.21,050 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது.

    சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டாலும் கூடுதலாக 180 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.

    இந்த திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது சென்னையில் 40, 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது.

    குடிநீர் திட்ட பணிகளுக்காக 170 பொறியாளர்களுக்கு மணிலாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 24 நகராட்சி பொறியாளர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 பெரிய குடிநீர் திட்டங்களில் 11 பணிகள் வேகமாக நடைபெறுகிறது. 7 பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    சென்னையில் கடந்த ஆண்டு இதே நாளில் 449 மி.லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது 650 மி.லிட்டர் நீர் வழங்குகிறோம். டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. 4 ஏரிகளில் இருந்து டிசம்பர் மாதம் வரை தண்ணீர் பெற முடியும்.

    மற்ற மாவட்டங்களில் மழை பெய்து உள்ளதால் குடிநீர் பிரச்சினை அதிகம் ஏற்படவில்லை. சென்னையிலும் விரைவில் நல்ல மழை பெய்யும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

    சென்னையில் 33 குளம், ஏரிகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. 15 கோவில் குளங்களும் சீரமைக்கப்படுகிறது. இதுதவிர 158 ஏரிகளை டி.வி.எஸ்., அசோக் லைலேண்ட் உள்ளிட்ட பெரிய கம்பெனிகள் உதவியுடன் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

    தமிழ்நாட்டில் கோடை மழையால் 1.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சென்னை ஏரிகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது 850 மி.லிட்டர் குடிநீர் கொடுத்தோம். தட்டுப்பாடு சமயங்களில் 450 மி.லிட்டர் குடிநீர் வழங்கி இருக்கிறோம். எனவே இப்போது கொடுக்கப்படும் 650 மி.லிட்டர் குடிநீர் என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani #DrikingWater

    ×