search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சரவை விரிவாக்கம்"

    சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
    ராய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

    சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

    காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அம்மாநில அமைச்சரவையில் எந்த கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 

    அதன்படி, கர்நாடக அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 12 துறைகளும், காங்கிரஸ் கட்சிக்கு 22 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரம், சுற்றுலா, கூட்டுறவு, போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.



    இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை, நீர்ப்பாசனம், சுகாதாரம், வேளாண், வனம், விளையாட்டு, வருவாய், சமூக நலத்துறை, ஊரக, நகர்ப்புறத்துறை உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட துறைகளின் மந்திரிகள் பதவியேற்கும் விழா வரும் 6-ம் தேதி நடைபெறும் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார். #KarnatakaMinistry #Portfolio #Congress #JDS
    ×