search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் பேச்சுவார்த்தை"

    • கடந்த பல ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர்.
    • மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா இடமாக வழங்கினர். இதனை தொடர்ந்து மீதமுள்ள இடத்தை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது‌. இந்த நிலையில் அந்த இடத்தை அரசுக்கு விற்பனை செய்த உரிமையாளருக்கு வழங்காமல் 18 குடும்பத்தினர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி உரிமையாளருக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 18 வீடுகளை இடிப்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் தாசில்தார் பூபாலச்சந்திரன், ஆதி திராவிட துறை தாசில்தார் ஸ்ரீதரன், மண்டல துணை தாசில்தார் அசோகன் வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர் அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்து விடுகிறோம் என உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஏற்கனவே 18 குடும்பங்களில் 5 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பட்டாவுடன் இடம் இருந்து வந்ததால் மீதமுள்ள 13 குடும்பங்களுக்கு சம்பவ இடத்திலேயே பட்டா வழங்குவதற்கு வருவாய் துறை ஏற்பாடு செய்து உடனடியாக பட்டாவும் வழங்கினர். இதனை தொடர்ந்து வீடுகளை இடிக்க சென்ற போது ஒரு வாரம் கால அவகாசம் வழங்கினால் பொருட்களை ஏற்றிக் கொண்டு இடத்தை காலி செய்து விடுகிறோம் என மீண்டும் பொதுமக்கள் அதிகாரியிடம் உறுதியளித்தனர். அதன் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி அங்கிருந்து சென்றனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதன் காரணமாக அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது.
    • ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில், திருப்பூர் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஓடைப் புறம்போக்கில் வசித்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. இதில் அவர்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப வீடுகள் அமைத்துக் கொண்டனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு, மின் இணைப்பு தர, மின் வாரியத்தினர் தடையில்லாச் சான்று வேண்டும் என்று கேட்பதாகவும் இது குறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை.

    இதனால் உடனடியாக தடையில்லா சான்று வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்த, அறிவொளி நகர் வார்டு உறுப்பினர் சையது ஒளி பானு மற்றும் பொதுமக்களிடம்,பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மந்தை புறம்போக்கு நிலம் என்று ஆவணங்களில் உள்ள வீடுகளுக்கு கால்நடை துறை அதிகாரிகளுடன் வரும் 2-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தாசில்தார் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், தண்ணீர்பந்தல் நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்லத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னப்பன்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×