search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா சிலைக்கு மாலை"

    • ஏ.எஸ். சண்முகம் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியிலும், தி.மு.க சார்பில் அண்ணா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தருமபுரி,

    முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், அதியமான்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள அண்ணாவின் உருச்சிலைக்கு, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், ஆனந்தன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், மகேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி எல்லப்பன், கிளை செயலாளர் துரை, சுந்தரமூர்த்தி, ராமச்சந்திரன், கிருஷ்ணன், முனியன், மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி சண்முகம், முனுசாமி, மஞ்சுநாதன், வார்டு உறுப்பினர் அன்பரசு, அண்ணாதுரை, பெருமாள், காளியப்பன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பொறுப்பு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியிலும், தி.மு.க சார்பில் அண்ணா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    • அஞ்சலி செலுத்தினர்
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாளை ஒட்டி நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில் அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வர்பாஷா உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கே.பி .அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி, 

    அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞரின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர்கல்வி அமைச்சருமான கே.பி .அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரி,கிருஷ்ணகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, நகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×