search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை
    X

    குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை

    • அஞ்சலி செலுத்தினர்
    • ஏராளானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாளை ஒட்டி நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில் அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வர்பாஷா உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×