search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான்கோட்டையில் தி.மு.க சார்பில்அண்ணா சிலைக்கு மாலை

    • ஏ.எஸ். சண்முகம் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியிலும், தி.மு.க சார்பில் அண்ணா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தருமபுரி,

    முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், அதியமான்கோட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள அண்ணாவின் உருச்சிலைக்கு, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், ஆனந்தன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், மகேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி எல்லப்பன், கிளை செயலாளர் துரை, சுந்தரமூர்த்தி, ராமச்சந்திரன், கிருஷ்ணன், முனியன், மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி சண்முகம், முனுசாமி, மஞ்சுநாதன், வார்டு உறுப்பினர் அன்பரசு, அண்ணாதுரை, பெருமாள், காளியப்பன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பொறுப்பு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியிலும், தி.மு.க சார்பில் அண்ணா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×