search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி நட்சத்திர விழா"

    • பக்தர்கள் நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.
    • சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40-வது ஆண்டாக கடந்த 11-–ந் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பிறகு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னிமலை மலை கோவிலை 16 கிலோ மீட்டர் சுற்றி கிரிவலம் வருகின்றனர். இவர்கள் இரவு மலைமீதுள்ள முருகன் கோவிலை வந்தடைந்தடைவர்.

    மேலும் இன்று காலை 9 மணிக்கு சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, முதல்கால வேள்வி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம், 1008 கலச அபிஷேகம் மற்றும் மழை வேண்டி மகா வருண ஜெப ஹோமம் ஆகியவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும் அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி புறப்பாடும் நடைபெறுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
    • முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழித்து சகல நன்மைகளும் எல்லோருக்கும் வேண்டி அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அக்னி நட்சத்திர விழா அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக்குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பா ளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலை கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், அஸ்த்ர ஜபம் சாந்தி ேஹாமம் முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். பின்னர் அன்று காலை 7.30 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாரா தனையும், அதைத்தொடர்ந்து 1 மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×