search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபோர்ப்ஸ்"

    இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். #MukeshAmbani
     


    அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தலைமையிடமாக கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியாகி வருகிறது. மாதம் இருமுறை வெளியாகும் இந்த பத்திரிகையில் உலக சாதனையாளர்கள் பட்டியல் அடிக்கடி வெளியிடப்படுகிறது. 

    அந்த வகையில் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

    முதன் முறையாக முதல் 100 கோடீஸ்வரர்களில் 4 பெண் தொழிலதிபர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். 61 வயதாகும் இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.



    கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 31 கோடி ரூபாய் ஆகும். நடப்பாண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.

    முகேஷ் அம்பானியை தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் அசிம்பிரேம்ஜி 2 ஆவது கோடீஸ்வரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 47 கோடி ரூபாய் ஆகும். தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். 4 ஆவது இடத்தில் அசோக் லேலண்டின் இந்துஜா சகோதரர்கள், 5 ஆவது இடத்தில் பலோன்ஜி மிஸ்ட்ரி உள்ளார்.
    ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes



    ஃபோர்ப்ஸ் பத்திரிகை சார்பில் டெக் உலகின் டாப் 50 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பெண் அதிகாரிகள் சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தலைமை வகிக்கின்றனர். 

    அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் 2018 பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.



    அவ்வாறு, சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, உபெர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாக்‌ஷி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

    அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெண் தலைவர்கள் அவரவர் துறைகளில் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
    ×