என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth intimidation"
- ஷீபா ராணி தனது கணவர், மகன் மற்றும் மேலாளருடன் சேர்ந்து, ஏழை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
- இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
தேனியை சேர்ந்தவர் ஷீபாராணி(வயது43). இவரது கணவர் ராஜசேகர்(53). இவர்களுக்கு இம்மானுவேல் (24) என்ற மகன் உள்ளார்.
இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். கோவை தொண்டாமுத்தூரில் தங்கியிருந்த ஷிபாராணி, தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து, அந்த பகுதியில், நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தின் மேலாளராக கோவையை சேர்ந்த பாபு(48) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர்கள், காரமடையை சேர்ந்த மருதாசலத்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் உங்களுக்கு வெளிநாட்டு பண உதவி மூலம் புதிதாக வீடு கட்டி தருகிறோம். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பணம் முன்பணமாக செலுத்த வேண்டும் என கேட்டனர்.
அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவர் ஷீபா ராணியின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
ஷீபா ராணி தனது கணவர், மகன் மற்றும் மேலாளருடன் சேர்ந்து, ஏழை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை நேரில் சென்று சந்திக்கின்றனர்.
அப்போது அவர்களிடம் உங்கள் வறுமையை போக்க தான் நாங்கள் வந்துள்ளோம். உங்களுக்கு சொந்தமாக வெளிநாட்டு உதவி மற்றும் உள்ளூர் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் ஒரு வீட்டினை கட்டி தருகிறோம்.
இந்த வீடு கட்டுவதற்கு முன்பணமாக நீங்கள் ரூ.52 ஆயிரம் செலுத்த வேண்டும் என அவர்களிடம் கூறுகின்றனர். அவர்களும் புதிதாக வீடு கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விடுகின்றனர்.
அதன்பின்னர் ஷீபா ராணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு கட்ட போகிறோம். நீங்கள் காலி செய்து விடுங்கள் என கூறிவிட்டு, வீட்டை முழுவதுமாக தரைமட்டமாக்குகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவ தற்கான அஸ்திவாரத்தை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
ஆனால் அதற்கு பிறகு அந்த வீட்டை பார்க்க வருவதே இல்லை. ஆனால் வீட்டை இடித்து விட்டு புதிதாக அஸ்திவாரம் போட்டதை நம்பி, கோவையில் காரமடை, தொண்டாமுத்தூர், குன்னத்தூர் பகுதிகளை சேர்ந்த 36 பேர் அவரிடம் ரூ.13.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் பலரிடமும் மோட்டார் சைக்கிளுக்கு லோன் வாங்கி தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறி இதுவரை ரூ.1 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்பு டைய ஷீபா ராணி தேனியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்தனர்.
மேலும் கோவையில் பதுங்கி இருந்த நிறுவனத்தின் மேலாளர் பாபுவையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஷீபாராணியின் கணவர் ராஜசேகர், மற்றும் மகன் இம்மானுவேல் இருவரையும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஷீபாராணி மற்றும் பாபுவிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவர்கள் இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
- திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருபவர் அறிவழகன் . இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தாடிக்காரமுக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அறிவழகன் வந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதினர். இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சாலையில் விழுந்தனர்.
லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் இருந்து எழுந்த இருவரும் போலீஸ்காரர் அறிவழகனைப் பார்த்து கடுமையாக திட்டியதோடு நான் யார் தெரியுமா? யார்கிட்ட பேசுற, நீ எந்த ஸ்டேசன்ல வேல பாக்குற சொல், நான் உன்னை என்ன செய்கிறேன் பார் என சீருடை அணிந்திருந்த போலீஸ் என்றும் பாராமல் ஒருமையில் பேசிக்கொண்டே இருந்தனர்.
ஒருகட்டத்தில் வாலிபர் ஒருவர், நான் நாளைக்கு பாரின் போகனும், இப்படியே எப்படி செல்வது, நீயே சொல்லு, நீ எந்த ஸ்டேசன்ல இருக்க என தனது மொபைலில் வீடியோ எடுத்தபடியே போலீஸ்காரர் அறிவழகனை மிரட்டும் வகையில் பேசினார் .
இதையெல்லாம் கேட்டபடி பொறுமையாக பைக்கில் அமர்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரர் அறிவழகன் செய்வதறியாது திக்குமுக்காடினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நைசாக போலீஸ்காரர் அறிவழகனை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது
போலீஸ் உடையில் இருந்த நபருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னாவது என அப்பகுதியில் இருந்த சிலர் பேசிக்கொண்டனர். போலீஸ்காரரை மிரட்டும் வகையில் பேசிய நபர்கள் இருவரும் யார் என திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்