search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman torture"

    காதலிக்குமாறு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் வெளியே செல்லும் போதெல்லாம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுமன் (வயது 19), ராஜாகனி மகன் ரங்கேஷ் ஆகியோர் காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

    இளம்பெண் பல முறை எச்சரித்தும் அவர்கள் திருந்தவில்லை. அவர்களின் தொந்தரவு வரம்புமீறி சென்றது. மேலும் அந்த பெண்ணின் புகைபடத்தை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த சுமனை கைது செய்தனர். ரங்கேசை தேடி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேணுகாதேவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் கல்யாணி, சகோதரர் சந்திரபோஸ் ஆகியோர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி விசாரணை நடத்தி, இளைய ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
    ×