என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yamaha Motor"

    • யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 11ஆம் தேதி புதிய வாகனம் வெளியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி யமஹா நிறுவனம் தனது XSR 155 அல்லது Nmax 155 மாடலை நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

    இரண்டில் ஒன்று அல்லது இரண்டு மாடல்களையும் கூட யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். XSR 155 மற்றும் Nmax 155 என இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மேக்ஸி-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டதால், யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



    மேலும், யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. எனவே, என்மேக்ஸ் 155 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 155 ஆகியவற்றை இந்தியாவில் உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக செலவு ஏற்படாது. ஏனெனில் இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15 போன்ற அதே தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களுடன், இந்த இரண்டு தயாரிப்புகளும் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதால் அவற்றை எளிதாக அணுக முடியும். அறிமுகப்படுத்தப்பட்டால், இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருப்பதை அறிவித்துள்ளது.



    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஒரு கோடி மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்திருக்கிறது. இந்தியாவில் யமஹா நிறுவனம் 1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. யமஹா நிறுவனம் இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் என மூன்று இடங்களில் உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறது.

    ஒரு கோடி யூனிட்டாக எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 வெளியிடப்பட்டது. இது யமஹாவின் சென்னை ஆலையில் இருந்து வெளியானது. புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    யமஹா மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் ஒரு யூனிட்களில் 80 சதவிகிதம் வாகனங்கள் யமஹாவின் சர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆலைகளில் இருந்து வெளியானவை ஆகும். மற்ற வாகனங்கள் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.



    "யமஹா நிறுவனம் இத்தனை ஆண்டுகள் கடந்த வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது ஆகும். நாடு முழுக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அழகு, கவர்ச்சி என எங்களது வாகனங்களுக்கு இருக்கும் தட்டுப்பாடு மற்றும் யமஹா பிரபலத்தன்மையின் தொடர் வளர்ச்சிக்கு இந்த மைல்கல் சான்றாக அமைந்திருக்கிறது" என்று யமஹா மோட்டார்ஸ் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் மோடோஃபுமி ஷிதாரா தெரிவித்தார். 

    1985 முதல் 2019 வரை 34 ஆண்டு கால பயணத்தில் யமஹா நிறுவனம் பல்வேறு மைல்கல்களை கடந்து இருக்கிறது. 1999 ஆண்டில் யமஹா பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. பின் 13 ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டு ஐம்பது லட்சம் யூனிட்கள் உற்பத்தியை பதிவு செய்தது.

    அந்த வகையில் தற்சமயம் ஒரு கோடி யூனிட்கள் உற்பத்தி மைல்கல் கடந்துள்ளது. யமஹாவின் சென்னை ஆலை இதன் உற்பத்தி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    ×