search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman sleeping"

    குளச்சல் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட். மீனவர். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி (வயது 25). நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் காற்றுக்காக மேரி தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மேரியின் வீட்டுக்குள் புகுந்தார். அவர் மேரி அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த மேரி, வீட்டில் திருடன் நுழைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    அக்கம்பக்கத்தினர் எழுந்து வந்து திருடனை துரத்தினர். அதற்குள் திருடன் 8 பவுன் தங்கச்சங்கிலியுடன் தப்பிச் சென்றான். இது குறித்து மேரி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தூங்கிக் கொண்டிருந்த தன்னிடம் இருந்து மர்ம நபர் 8 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டதாகவும், அந்த நபரை கண்டுபிடித்து நகையை மீட்டுத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வீட்டில் தூங்கிய பெண் தலையாரியிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது  மனைவி ஆலம்மாள் (37). இவர் அந்த ஊரில் தலையாரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் உள்ள அறையில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அடுத்த அறையில் கருத்தப்பாண்டி தூங்கி கொண்டிருந்துள்ளார். 

    நள்ளிரவில் மொட்டை மாடி வழியாக இறங்கி வந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த ஆலம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் பதறிப்போன ஆலம்மாள் இதுபற்றி சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    சாம்பவர் வடகரையில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் படுத்து தூங்கிய 2 பெண்களிடம் நகையை பறித்து சென்றனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை தேரடி தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது50). விவசாயி. இவரது மகள் ராமலட்சுமியை, அப்பகுதி லட்சுமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ராமலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் கருப்பசாமி அவருக்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கு அழைத்து வந்திருந்தார். 

    இரவில் ராமலட்சுமி வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் திடீரென ராமலட்சுமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். பின்னர் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டான். சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த ராமலட்சுமி திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி சென்றுவிட்டான். 

    இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் அதே பகுதி புளியம்பட்டி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி களஞ்சியம்(55) என்பவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த களஞ்சியம் கழுத்தில் கிடந்த 25 கிராம் நகையை பறித்தான். திடுக்கிட்டு விழித்த களஞ்சியம் கொள்ளையனிடம்  நகை சிக்காமல் இருக்க போராடினார். 
    இதில் நகை அறுந்து பாதி நகை கொள்ளையனிடம் சிக்கியது. அந்த நகையுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். 

    அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் சாம்பவர் வடகரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வெட்டை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×