என் மலர்
நீங்கள் தேடியது "Woman dies in an accident"
- கணவன்-மனைவி பைக்கில் சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48). இவரது மனைவி பவானி (43). கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மருதாடு நோக்கி சென்றனர்.
மருதாடு கிராமம் அருகே செல்லும் போது இவர்க ளுக்கு பின்னால் வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது.
இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச் சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மேல் சிகிச்சைக்காக பவானி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட் டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் திருலோக சந்தர். இவரது மனைவி அனிதா (வயது 41). இவரது பிள்ளைகள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
அனிதா தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை குழந்தைகளை தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் அரியூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி அனிதா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அனிதாவின் தலை மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவரது தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.






