என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பெண் சாவு"

    • கணவன்-மனைவி பைக்கில் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48). இவரது மனைவி பவானி (43). கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மருதாடு நோக்கி சென்றனர்.

    மருதாடு கிராமம் அருகே செல்லும் போது இவர்க ளுக்கு பின்னால் வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது.

    இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச் சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மேல் சிகிச்சைக்காக பவானி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட் டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×