என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது லாரி மோதி பெண் சாவு
    X

    பைக் மீது லாரி மோதி பெண் சாவு

    • அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் திருலோக சந்தர். இவரது மனைவி அனிதா (வயது 41). இவரது பிள்ளைகள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    அனிதா தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.

    வழக்கம் போல இன்று காலை குழந்தைகளை தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் அரியூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி அனிதா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அனிதாவின் தலை மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவரது தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×