என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் பெண் சாவு"

    • மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
    • கோவிந்தம்மாள் (வயது 60) என்பவர் உயிரிழந்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெல் மலை கிராமத்திலிருந்து பாலக்கோடு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது மலைபாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி தலைக்குப்புறாக கவிழ்ந்த விபத்தில் சென்னசத்திரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 60) என்பவர் உயிரிழந்தார்.

    மேலும் வாகனத்தில் வந்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்துக்கு குறித்து மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் திருலோக சந்தர். இவரது மனைவி அனிதா (வயது 41). இவரது பிள்ளைகள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    அனிதா தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.

    வழக்கம் போல இன்று காலை குழந்தைகளை தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் அரியூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி அனிதா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அனிதாவின் தலை மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவரது தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

    ×