search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Widespread rains in"

    • வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலை யிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    அதே போல் மாவட்ட முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மாலை 5 மணி பிறகு வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகரப் பகுதியில் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் இரவு சாரல் மழை செய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    தாளவாடி பகுதியில் இரவில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்க லம், கோபி, பவானி, கவுந்த ப்பாடி, வரட்டுப்பள்ளம், கொடிவேரி, சென்னிமலை, நம்பியூர், பகுதிகளிலும் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    தாளவாடி - 33, கொடு முடி - 30.80, பெருந்துறை - 27, சத்தியமங்கலம்-27, கோபி - 25.20, பவானி - 21, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.20, ஈரோடு- 9, வரட்டு பள்ளம்- 8.80, கொடிவேரி-6.20, சென்னிமலை - 5, நம்பியூர் - 3.

    • ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ராகி, மக்காச்சோளம், கம்பு, பச்சைப்பயிறு, தட்டப்பயிர் உள்ளிட்ட பயிர்களையும், பருவ நிலைக்கு ஏற்ப மற்ற வகை பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

    மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அந்த மழையினால் மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தது. இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கொண்டனர்.

    இந்நிலையில் மாலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக நம்பியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1.30 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 41 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வரட்டு ப்பள்ளம், குண்டேரி பள்ளம் பகுதிகளில் இடியு டன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கவுந்த ப்பாடி, சென்னிமலை பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.

    இதேபோல் மொடக்கு றிச்சி சுற்றுவட்டா ர பகுதி யில் மாலையில் கருமேக ங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனை த்தொ டர்ந்து மாலை 3.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழையானது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மொடக்குறிச்சி, சோலார், கஸ்பாபே ட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    கோடை மழை பெய்ததையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-41, வரட்டுப்பள்ளம்-28.40, குண்டேரிபள்ளம்-26.60, சத்தியமங்கலம்-11, அம்மா பேட்டை-9, கவுந்தப்பாடி-5.40, எலந்த குட்டைமேடு-3.40, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-2.

    ×