search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் மலைப்பகுதியில் பரவலாக மழை
    X

    பர்கூர் மலைப்பகுதியில் பரவலாக மழை

    • ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ராகி, மக்காச்சோளம், கம்பு, பச்சைப்பயிறு, தட்டப்பயிர் உள்ளிட்ட பயிர்களையும், பருவ நிலைக்கு ஏற்ப மற்ற வகை பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

    மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அந்த மழையினால் மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×