search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "widely rain"

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 9 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. பாபநாசம் அணையில் தற்போது 71.05 அடியும், சேர்வலாறில் 82.74 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    அணைகளுக்கு தற்போது 672 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை களில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக வினாடிக்கு 658 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோடை மேலழகியான் மற்றும் நதியுண்ணி, கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் நெல் பயிடும் பணியை உற்சாகமாக தொடங்கி உள்ளனர். முக்கூடல் சுற்று வட்டார பகுதிகளில் தாமிர பரணி ஆற்றை ஒட்டிய பகுதி களில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது.

    ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தென்காசியில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி, குண்டாறு அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    அதேபோல் குண்டாறு அணையில் நிரம்பி வழியும் நீரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. #Rain

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு, வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வடகிழக்கு பருவமழை தாமதமானது.

    நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டததில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த மழை அடுத்த போக சாகுபடிக்கு கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1,268 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1,990 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.75 அடியாக உள்ளது.

    வரு‌ஷநாடு மலை மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 2,168 கன அடியாக உள்ளது. அது அப்படியே திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 69 அடியாகவே நீடிக்கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.30 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையில் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது.

    தேக்கடி 5.2, கூடலூர் 1.4, சண்முகா நதி அணை 2, உத்தமபாளையம் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×