search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who slept"

    • கோழிப்பண்ணை தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழி முட்டை ஏற்றும் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் இவர் மது குடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணனை ஏன் வேலைக்கு செல்லா மல் குடித்து கொண்டு இருக்கிறீர்கள் என கண்டி த்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று இரவு கினிப்பாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் தூங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மறுநாள் காலை வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஒருவர் கிணிப்பாளையம் குமரன் நகரில் உள்ள ஒரு பொது கிணற்றில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் எறும் கிணற்றின் மீது தூங்கிய போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×