என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare camp"

    • ரிச்சர்ட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டு க்கழகம், மாற்றுத்தி றனாளி தேசிய மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன.

    முடநீக்கு உபகரண ங்களான 3 சக்கர சைக்கிள், காதுகேட்கும் கருவி, கைத்தடி, சக்கர நாற்காலி, செயற்கை கை, கால்கள், ஊன்றுகோல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க ப்படுகிறது.

    பயனாளிகளை கண்டறிய குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் முகாம் நடக்கிறது. முகாமை ரிச்சர்ட் எம்.எல்.ஏ.,

    தொடங்கி வைத்தார். சமூகநலத்துறை செயலர் உதயகுமார், தேசிய நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். துறையின் மேலாண் இயக்குனர் சாந்தி வரவேற்றார்.

    விழாவில் மாற்றுத் திறனாளிகள் மேம்பா ட்டுக்கழக ஊழியர்கள், மாவட்ட மறுவாழ்வு மைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்கலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட சோலை குடியிருப்பு, வள்ளி யம்மாள்புரம், அடைக்கலா புரம் ஆகிய பகுதிகளில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சாலை பணிகள் தொடங்கி வைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்க லாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பயனாளி களுக்கு வருவாய் துறை சார்பில் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 பேருக்கு கடன் உதவி தொகையும், மாற்றுத்திற னாளி நலத்துறை சார்பில் 2 பேருக்கு மூன்று சக்கர நாற்காலியும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 6 பேருக்கும், 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தங்கள் அடைக்கலாபுரம் ஊருக்கு பஸ் வசதி இல்லை. எங்களுக்கு பஸ் வசதி வேண்டும் என்று கேட்டார். உடனே கனிமொழி எம்.பி. நடவடிக்கை எடுப்பதாக கூறி மாலையிலே பஸ் விட ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இம்முகாமில் சப்- கலெக்டர் குருசந்திரன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், யூனியன் சேர்மன் பாலசிங், ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, செம்ம றிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமானது காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
    • இதில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாம கேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின் நலவாரிய பதிவை அதிகரிக்க நலவாரிய பதிவு சிறப்பு முகாம்கள் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக நாளை (சனிக்கிழமை) பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத் தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இதர வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    ஆதார் எண் இணைக்கப்பட்ட கைபேசி, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் டிரைவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர் நலவாரியத்தில் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×