search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare assistant"

    • 194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா தலைமையில் நடைபெற்றது.
    • தி.முக. பிரதிநிதிகள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194- வது (அ) வட்ட தி. மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈஞ்சம்பாக்கம் 194 - வது (அ)வட்ட செயலாளர் குங்பூ எஸ். கர்ணா,194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும் 15 - வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 160 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ. 3000 ஊக்கத்தொகை, 2500 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை, 25 சாலை வியாபாரிகளுக்கு நிழற்குடை, 5 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்,5 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மாவட்ட துணை செயலாளரும் சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவருமான த.விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் தாஸ், ராஜா, தியாகராஜன் மற்றும் வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஜி.சங்கர், எ.முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    வேலூரில் நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். #dinakaran
    வேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் வேலூர் மத்திய மாவட்டங்களின் சார்பில் ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு வேலூர் மாங்காய் மண்டி அருகே நடைபெறுகிறது.

    இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
    வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி. பார்த்திபன் தலைமை தாங்குகிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசுகிறார். இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் மத்திய மாவட்ட செயலாளர் கலையரசு, மண்டல பொறுப்பாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

    கட்சி அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில் பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இதனையொட்டி வேலூர் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வரவேற்பு பேனர்கள் கொடி தோரணங்கள் கட்டியுள்ளனர். விழாவிற்கு மாங்காய் மண்டி அருகே சிலம்பு தியேட்டர் எதிரில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. #dinakaran
    ×