என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weapons depot"

    • ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    • கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலானது பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    கவச மீட்பு வாகனங்கள், மின்னணு போர் அமைப்பு, முப்படைகளுக்கான ஒருங்கிணைந்த பொதுவான மேலாண்மை அமைப்பு மற்றும் தரையில் இருந்து வான் ஏவுகணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1.05 லட்சம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், தானியங்கி நீர்மூழ்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தக் கொள்முதல் கடற்படை மற்றும் வணிக கப்பல்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு உதவும் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். #Weaponsdepot #Idlibexplosion #39civilianskills
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுப்படைகளுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் சுமார் 25 லட்சம் மக்களில் சரிபாதி பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

    இந்த மாகாணத்தின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ச்சியில் அருகாமையில் உள்ள இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினர் மீட்டனர். எனினும், 39 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

    இது விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Weaponsdepot  #Idlibexplosion #39civilianskills
    ×