search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Festival"

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

    கவுந்தப்பாடி, 

    கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை நஞ்ச கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. இதையொட்டி பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்துவரப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

    அம்மன் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று மறுபூஜை அன்று மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது. அதில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மாரியம்மன் சிலை உடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் நீர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

    ஊர்வலமானது பள்ளிக்கூட ரோடு, வாய்க்கால் ரோடு, விநாயகர் வீதி, மெயின் ரோடு மற்றும் அனைத்து வீதிகளிலும் சென்றது. நிகழ்ச்சியில் பெண்கள் அம்மன் மஞ்சள் நீர் ஊர்வலத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேங்காய், பழம் மஞ்சள் நீர் வைத்து வரவேற்றார்கள்.

    இதில் சிறுவர்கள் பெரியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினார்கள். மாலையில் மாரியம்மனுக்கு அக்னி அபிஷேகமும் சிறப்பு மகாதீபாரதனையும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்

    ×