என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vizianagaram"

    • மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

    ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள ரெயில் தடத்தில் விசாகா- ராயகாடா பயணிகள் ரெயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இதில், பயணிகள் ரெயிலின் 3 பெண்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனால் உயரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து ரெயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

    மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ரெயிலில் பயணிகள் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும்
    • படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- மத்திய மந்திரி

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்டகப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

    அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

    அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13  ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.

    மீட்புப் பணி துரிதமான நடைபெற்று வருகிறது.

    • தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன
    • மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே ரெயில் வந்தபோது சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

    அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த பாலசா ரெயிலின் பின்புறத்தில் பயங்கர வேகத்துடன் மோதியது.

    இந்த விபத்தில் பாலசா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. ராயகடா நோக்கி சென்ற ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்து கூச்சலிட்டனர். ரெயில் பெட்டிகளின் அவசரவழி வழியாக சில பயணிகள் வெளியே வந்தனர். அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்ததால் எதுவும் தெரியவில்லை.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர. சம்பவ நடந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

    ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து அதிலிருந்த பயணிகள் மீட்கப்பட்டனர். நேற்று இரவு பயணிகள் 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு முதல் விடிய விடிய ரெயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

    காயமடைந்த 40 பயணிகள், விஜயநகரம் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் திருமலை- மெடிகோவர் மருத்துவமனைகள் மற்றும் விஜயநகரத்தின் குயின்ஸ் என்ஆர்ஐ மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று காலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.

    ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் கிடக்கும் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி இன்று காலையில் தொடர்ந்து நடந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் 8106053051, 8106053021, 8500041670, 8500041671, 0891 2746330, 0891 2744619, 8300383004 என்ற இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில் விபத்தில் பயணிகள் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதற்கட்ட விசாரணையில் ரெயில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
    • ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரெயில் சேவை படிப்படியாக சீராகும் என தகவல்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில் ராயகடா பயணிகள் ரெயிலின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் செய்த தவறால் தான் ரெயில் விபத்தில் சிக்கியது என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏழுபேர் கையொப்பமிட்ட முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் விபத்துக்குள்ளான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள், கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள், அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகள், தரவுகள் அடங்கிய அறிக்கை மற்றும் ஸ்பீடோமீட்டர் விவரம் உள்ளிட்டவை மிக கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

     

    ராயகடா பயணிகள் ரெயிலில் இருந்த ஓட்டுனர்கள் தவறான ஆட்டோ சிக்னல்களை வழங்கியதால் தான், இந்த ரெயிலின் பின்புறம் விசாகபட்டினம் பாலசா பயணிகள் ரெயில் மீது மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி ராயகடா பயணிகள் ரெயிலின் லோக்கோ பைலட் எஸ்.எம்.எஸ். ராவ் மற்றும் துணை லோக்கோ பைலட் ஆகியோர் தான் ரெயில் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ரெயில்வே விதிகளின் படி ராயகடா ரெயில் இரண்டு நிமிடங்களுக்கு நின்று, பிறகு மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பி சென்றிருக்க வேண்டும். ரெயில் இவ்வாறு நிற்காமல் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

    ராயகடா பயணிகள் ரெயில் விசாகபட்டினம் பாலசா ரெயிலின் மீது அக்டோபர் 29-ம் தேதி இரவு 7 மணி அளவில் மோதியது. இந்த விபத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் விழியநகரம் மாவட்டத்தில் அரங்கேறியது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

    ×