search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar statue procession"

    விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது நெமந்தகார தெருவில் ஒருவர் இறந்துவிட்டதால் அந்த தெரு வழியாக செல்லக்கூடிய ஊர்வலம் மக்தும்மரைக்காயர் தெரு வழியாக சென்றது.

    அந்த வழியாக ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்காமல் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது ஊர்வலத்தினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதில் ஊர்வலத்தில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். அதேபோன்று பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது ஊர்வலத்தினர் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கினர். ஊர்வலத்தினரும் பதிலுக்கு கல்வீசினர்.

    இந்த சம்பவத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
    சென்னையில் போலீசார் தடை செய்த பகுதியில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #VinayagarChathurthi
    சென்னை :

    விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதைத்தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாள் வரை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதன்படி கோவில் மற்றும் வீட்டுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் கரைக்கப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.

    இந்நிலையில், சென்னையில் ஒரு சில பகுதிகள் வழியே விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து ஐஸ் அவுஸ் நோக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர்.  அவர்களில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது. #VinayagarChathurthi #GaneshChathurthi
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டுசென்று கரைப்பதற்கு 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை (சனிக்கிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது.

    இதற்காக சதுப்பேரி ஏரியில் மாநகராட்சி சார்பில் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் இருந்து புறப்படும் ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின்பஜார், லாங்குபஜார், அண்ணா கலையரங்கம் வரை செல்கிறது. அதேபோன்று நகரின் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளும் அண்ணாகலையரங்கம் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டை சுற்றுச்சாலை, முள்ளிப்பாளையம், கொணவட்டம் வழியாக சென்று சதுப்பேரி ஏரியை அடைகிறது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் வேலூரில் விநாயகர்சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. #VinayagarChathurthi  #GaneshChathurthi

    ×