என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vengal"

    வெங்கல் அருகே லாரி மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    மாதவரம் அம்பேத்கார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46).தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். இவர் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை என்ற கிராமத்துக்கு விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணியை மொத்தமாக வாங்க வந்தார். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நோக்கி சென்ற லாரி ஒன்று இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது39). தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில் ‘ஹார்டுவேர்ஸ்’ கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    புன்னப்பாக்கம்-பெரு முடிவாக்கம் நெடுஞ்சாலையில் வளைவில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் ஆனந்த் மோட்டார் சைக்கிளை திடீர் என்று பிரேக் போட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ஆனந்த் பலியானார்.

    தகவல் அறிந்ததும் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்று மணலில் புதைந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே காதர்வேடு மாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார்.

    கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஒரு ஆடு எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது.

    பின்னர் அது மேலே ஏறி வரமுடியாமல் தவித்தது. இதனால் கோவிந்தன் அந்த பள்ளத்தில் இறங்க முயன்றார். ஆனால், அவர் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார். பின்னர் அவராலும் மேலே ஏறி வர முடியவில்லை.

    பள்ளத்தில் சிக்கிய விவசாயி சிறிது நேரத்தில் மணலில் புதைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு வெளியே எடுத்தனர். ஆனால், அதற்குள் அவர் மூச்சு திணறி இறந்து போனார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×