search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle parking"

    • தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திரு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்காக 72 ஏக்கர் பரப்ப ளவிலான பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 144 அடிஉயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ப்பட உள்ளது. குலசேகரன் பட்டினம் தருவைகுளம், கருங்காளி அம்மன் கோவில் சன்னதி தெரு சந்திப்பு, கியாஸ் குடோன் அருகே, மணப்பாடு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு, தரைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆலோச னையின் பேரில் கோவில் செயல் அலுவலர்கள் ராம சுப்பிரமணியன், வெங்க டேஸ்வரி ஆகியோர் மேற்பா ர்வையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது.
    • டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது. இந்த நிலையில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 91 லட்சம் ரூபாய்க்கு இந்த வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ஏலம் போனது.
    • நிதியாண்டு முடிவடையுள்ள நிலையில் அடுத்த மூன்று நிதியாண்டுக்கு ஏலம் நடத்தப்படுகிறது.

    திருப்பூர்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூரில் கட்டியுள்ள பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம், புது பஸ் நிலையம் வளாகம் மற்றும் பார்க்கிங் வளாகம் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களுக்கு அடுத்த 3 நிதியாண்டுக்கான உரிமத்துக்கு ஏலம் நடைபெறுகிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் காமராஜ் ரோடு மத்திய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கடந்த செப்டம்பர் மாதம் ஏலம் விடப்பட்டது. அப்போது 91 லட்சம் ரூபாய்க்கு இந்த வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ஏலம் போனது.

    தற்போது நிதியாண்டு முடிவடையுள்ள நிலையில் அடுத்த மூன்று நிதியாண்டுக்கு ஏலம் நடத்தப்படுகிறது. இதற்கு முன் ஏலம் எடுத்த ஏலதாரர், கட்டுப்படியாகவில்லை என புதுப்பிக்க முன் வரவில்லை. எனவே புதிதாக ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான ஏலம் 28-ந் தேதி நடக்கிறது. இது தவிர பி.என்., ரோடு புது பஸ் நிலையம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள், பார்க்கிங் வளாகம், வெள்ளி விழா நினைவு பூங்கா நுழைவு கட்டணம் வசூலித்தல், இடுவாயில் அமைந்துள்ள மூங்கில் பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கும் அன்றைய தினம் ஏலம் நடைபெற உள்ளது.

    ×