search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veerasakkadevi Temple"

    • தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
    • அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 12-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கயத்தாறு:

    பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலய 67-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி சார்பாக கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட மணி மண்டபத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 39-ம் ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டியன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் மாநில திருமண குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் முத்துப் பாண்டியன், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சக்கையா, புதுப்பட்டி கிளை செயலாளர் ஹரிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முத்தமிழ் செல்வம், இளைஞர் அணி பொருளாளர் செல்வ கட்டபொம்மு, துணைத்தலைவர் சந்தன மேகலிங்க ராஜ் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×