search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valor"

    • திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
    • டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழுப்புரம் :

    பணி காலத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்து இருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். 

    கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பணிகாலத்தில் 261 பேர் உயிர் நீத்துள்ளனர்.அதில்தமிழகத்தில் மூன்று பேர் உயிர் நீத்துள்ளனர்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடிய கள்ளவர்களை பிடிக்கச் சென்ற பொழுது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவர் உட்பட 2 கவாலர் வீர மரணம் அடைந்துள்ளனர். தியாகத்தை நினைவு போற்றும் வகையில் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,இவரைத் தொடர்ந்து ஏடி.எஸ்.பிக்கள் கோவிந்தராஜ், தேவராஜ், டிஎஸ்பிக்கள் பார்த்திபன், ஜனகராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் ரேவதி, தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 'பின்னர் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு விண்ணை பிளக்கும் வண்ணம் 21 குண்டுகள் 3 முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

    • கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம்.
    • கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மடத்துக்குளம்:

    வீரம் செறிந்தது தமிழ்மண். பழங்கால தமிழர்கள் வீரத்தை போற்றி புகழ்ந்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்தன. ஒருவரின் விளை நிலங்கள் பரப்பு மற்றும் கால்நடைகள் எண்ணிக்கையை வைத்து அவரின் சமுதாய அந்தஸ்து நிர்ணயிக்கப்பட்டது. குறுநிலமன்னர்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், ஆயிரக்கணக்கில் ஆடுகளும், நூற்றுக்கணக்கில் மாடுகள் மற்றும் எருமைகள் வளர்த்தனர். தற்போது உள்ளதைப் போல மக்கள் தொகை அதிகம் இல்லாததால், அமராவதி ஆற்றங்கரையோரம் பலநூறு ஏக்கர் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அதனால் மடத்துக்குளம் பகுதியில்தொடங்கி கொமரலிங்கம், கல்லாபுரம் அமராவதி வன ச்சரகம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரை மேய்ச்சல் நிலத்தின் எல்லைகள் நீண் டிருந்தன.

    இந்தப் பகுதிக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்குச் சென்று திரும்புவது வழக்கம். கோடைகாலம் மற்றும் வறட்சி ஏற்பட்ட காலங்களில் மலை அடிவார பகுதியில் தண்ணீர் மற்றும் பசுமை உள்ள பகுதியில் பட்டி அமைத்து சில வாரம் தங்கி நன்கு மேய்ந்த பின்பு, கால்நடைகளை திருப்பி அழைத்து வந்துள்ளனர். எல்லைகள் வரையறை இல்லாததால், வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை வேட்டையாடின. இதைதடுக்கவும் கால்நடைகளை பாதுகாக்கவும் பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் கத்திவீசுதல், ஈட்டி எறிதல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பலவகையான தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர்.

    கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் போது பாதுகாப்புக்காக வீரர்கள் உடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு மிருகங்கள் தாக்கினால் சண்டையிட்டு அதை கொன்று கால்நடைகளைத் பாதுகாத்தனர். இந்தப் பகுதியில் அதிகளவு புலிகளின் தாக்குதல் இருந்துள்ளது. இதுபோல் புலியுடன் வீரர்கள் போராடிய இடத்தில் நினைவாக கருங்கல்லில் புடைப்பு சிற்பம் உருவாக்கி அதை வணங்குவது தமிழர்கள் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சிற்பத்திற்கு புலிக்குத்திக்கல் என பெயரிட்டனர்.இந்த கல்லில் வீரன் ஒருவன் புலியுடன் போராடுவது போல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூரில் புலிக்குத்திக்கல் உள்ளது.இன்றும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

    ×