search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U.S. warns"

    • எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும்.
    • ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவு அந்நாட்டு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக பதிலளிக்கும் என்றார். நான் தெளிவாகச் சொல்கிறேன், ரஷ்யா இந்த எல்லையைத் தாண்டினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    உக்ரைனில் ஆக்கிரமித்துள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்த நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு நிறைவு பெற்றதும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த சல்லிவன், உக்ரைனில் நடைபெறும் வாக்கெடுப்பு வலிமை அல்லது நம்பிக்கையின் அடையாளங்கள் அல்ல என்றார்.

    இது ரஷிய ராணுவத்திற்கான திரும்ப அழைப்பு என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அவர்கள் ஓட முயற்சிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது எனவும் அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவும் புதினும் எப்படி மோசமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் அவை என்றும் சல்லிவன் தெரிவித்தார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது. #USWarn #China #Russia
    வாஷிங்டன்:

    வடகொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைக்கு மாறாகவும் அணுக்குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வந்தது.

    இதற்காக வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியாவுடன் ரஷிய நிறுவனமும், சீன நிறுவனங்களும் வர்த்தக உறவு கொண்டு இருந்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து ரஷியாவின் பிராபினட் பீட்டி நிறுவனத்தை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இதேபோன்று சீனாவின் டாலியன் சன் மூன்ஸ்டார் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்கல் டிரேடிங் கம்பெனி, அதன் சிங்கப்பூர் கிளை நிறுவனம் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர சம்மதித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, வடகொரியா நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறது.

    இந்த நிலையில் இப்போது வடகொரியாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த ரஷிய, சீன நிறுவனங்களை அமெரிக்கா கருப்பு பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதித்து இருப்பது, அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பதையே காட்டுகிறது.  #USWarn #China #Russia  #Tamilnews 
    ×