search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truecaller"

    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் ஏக்தாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.
    • பிரபல நிறுவனமான ட்ரூகாலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆலன் மமேதி, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

    கனடாவில் கல்வி கற்பதற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த ஏக்தா என்ற இளம்பெண் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார். அவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள்? என ஒருவர் கேள்வி கேட்ட போது, அதற்கு அந்த பெண் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் ஒரு வேலையை தொடங்குவது தான் எனது லட்சியம் என கூறியிருந்தது தான் அதற்கு முக்கிய காரணம். மேலும் அந்த இளம்பெண், கனடாவில் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

    அதில் ஒருவர், சூரியன் உதிப்பதையும், மறைவதையும் இந்தியாவில் பார்க்க முடியாதா? எனவும், மற்றொருவர், நான் கனடாவில் ஒரு ஆண்டு வாழ்ந்தேன். கோடையில் நன்றாக இருந்தது. ஆனால் குளிர்காலம் பயங்கரமாக இருந்தது என கூறியிருந்தார். இதே போன்று பயனர்கள் பலரும் ஏக்தாவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

    இந்நிலையில் பிரபல நிறுவனமான ட்ரூகாலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆலன் மமேதி, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், உங்கள் படிப்பை முடித்ததும் நீங்கள் உலகில் எந்த நாட்டில் உள்ள ட்ரூகாலர் அலுவலகத்தில் விரும்பினாலும் பணி செய்யலாம் என்று கூறி உள்ளார். இந்நிலையில் ஆலன், ஏக்தாவுக்கு ஆதரவு அளித்ததையும் விமர்சித்து பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. #spam #TRAI



    2018 ஆம் ஆண்டு ஸ்பேம் (தேவையற்ற) அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல தகவல் பரிமாற்ற செயலியான ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்தியர்களுக்கு வரும் மொத்த அழைப்புகளில் கிட்டத்தட்ட ஆறு சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஸ்பேம் அழைப்புகளாக இருந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை 22.3 கால்கள் என மாதாந்திர அடிப்படையில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1.5 சதவிகிதம் குறைவு ஆகும்.

    பிரேசிலில் வசிக்கும் ட்ரூகாலர் பயணர்கள் மாதம் 37.5 ஸ்பேம் அழைப்புகளை பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகம் என க்ரூகாலர் இன்சைட் பிரித்யேக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ட்ரூகாலர் வெளியிட்டிருக்கும் ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில், இந்தியாவை தொடர்ந்து சிலி, தென் ஆப்ரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் அதிக ஸ்பேம் அழைப்புகளுக்கு காரணமானவர்கள் பட்டியலில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

    இந்த ஆண்டு பயனர்கள் எதிர்கொண்ட ஸ்பேம் அழைப்புகளில் 91 சதவிகிதம் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் இருந்துள்ளன. இவற்றில் பேலன்ஸ் இருப்புத் தொகையை நினைவூட்டுவது, புதிய சலுகைகளை அறிவிப்பது போன்றவற்றுக்காக டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டெலிகாம் நிறுவனங்களை தொடர்ந்து டெலிமார்கெடிங் செய்வோர் ஏழு சதவிகிதம் பயனர்களுக்கு இடையூறாக இருக்கும் படி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச அளவில் 1.77 கோடி ஸ்பேம் அழைப்புகள் கண்டறியப்பட்டதாக ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. பயனர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நான்காவது அழைப்பும் ஸ்பேம் ஆகும்.
    ×