search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Token Distribution"

    • செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
    • பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர்:

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 4,58,473 விண்ணப்ப படிவங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகள் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கினர்.

    • பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.
    • பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ரூ. 1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பல்லடம் வட்டாரத்தில் மொத்தம் 83,620 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் சர்க்கரை கார்டுகள் 3,200 தவிர்த்து 80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு,பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து,கூட்டுறவுத் துறை சங்க கள அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:-பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி நேற்று முன் தினம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள். டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. தினமும் 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    • 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

    முதல்-அைமச்சர் இந்த ஆண்டுதைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்பஅட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடை களிலும் நடை முறையில் உள்ள 6,14,906 அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் 434மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வுள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற ஏது வாக குடும்ப அடடை தாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை (3-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை விடுமுறை தினமான 6-ந் தேி நீங்கலாக டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகப் பணியினை 9-ந் தேதி அன்று தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னரே 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும். கூட்ட நெரி சலை தவிர்க்கும் பொருட்டு ரேசன் கடை பணியாளர் கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று பொது மக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்படும். 

    குடும்ப அட்டை தாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசுமற்றும் ரொக்கப்பணம் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146- 229854 மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இயங்கி வரும் தொலை பேசி எண் 04146-229884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×