search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMC Leader"

    சிட் பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. #TMCLeader #PonziCase
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட், சுமார் ரூ.1,900 கோடி ஊழலில் ஈடுபட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சிங் என்பவர் தலைவராக இருந்த பிரபல அல்கெமிஸ்ட் குரூப் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிங் எம்.பி. விலகியதாக கூறப்பட்டாலும், அவரது எம்.பி. பதவி தொடர்பான விவரங்களில் அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவே கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. #TMCleaderkilled
    ஹவுரா:

    மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பாக்னன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மோஷின் கான். ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பூத் அளவிலான செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியபோது, ஹதூரியா கிராமத்தில் மர்மநபர்கள் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த முகமது மோஷின் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். மோஷின் கானை சுட்டுக்கொன்ற நபர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுட்டுக் கொல்லப்பட்ட மோஷின் கானின் மனைவி, கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #TMCleaderkilled
    ×