search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvadhirai Tirunal"

    • பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் குற்றாலத்தில் அமைந்துள்ளது.
    • 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    தென்காசி:

    குற்றாலத்தில் பழமையானதும், தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரை சபை அமைய பெற்றதுமான குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருக்குற்றாலநாதா் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான மாா்கழி திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக குற்றாலநாத சுவாமி ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாள் தோறும் காலை மாலை சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5-ந் திருநாளான ஜனவரி 1 -ந் தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், 4-ந் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 6-ந் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது.

    சங்கரன்கோவில்:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திரு வாதிரை திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி யேற்றத்தை முன்னிட்டு நேற்று இரவு அங்கூர் விநாயகர் சன்னதியில் வைத்து சுவாமி அம்பாளுக்கு அனுக்ஞை அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று காலை 7.15 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 4-ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு, சுவாமி- அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவமும், அதனை தொடர்ந்து 63 நாயன்மார்கள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    5-ம் திருநாள் அன்று சுவாமி அம்பாளுக்கு ஊடல் உற்சவம் நடைபெறுகிறது. 6-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், கோவிலில் நடராஜர் பரிவட்டம் இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ம் திருநாள் அன்று இரவு 8 மணிக்கு நடராஜர் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், இரவு 11 மணிக்கு வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ம் திருநாள் அன்று காலை பச்சை சாத்தி அலங்காரத்திலும் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    9-ம் திருநாள் அன்று காலை சுவாமி- அம்பாள் கோரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய திருவிழாவான 10-ம் திருநாள் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகிறது.

    4.45 மணிக்கு கோபூஜையும், 5 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணிக்கு சப்பர தீபாராதனையும் 9 மணிக்கு நடராஜர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

    ×