search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati devotees"

    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதியில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் புரிபவர்களை கண்டறிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் பக்தர்கள் போல் நடித்து சகபயணிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்து வந்ததை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். அந்த கும்பல் தங்கியிருந்த இடத்துக்கு சென்று 5 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த பேலா (45), ரேணுகா (55), கார்த்திக் (20), சந்தோஷ் (28), வாணிஸ்ரீ (50), சவிதா (30), நாகராஜூ (21), மது (20), அனூப் (24) என்பது தெரியவந்தது.தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்க்ள் அனைவரும் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. #tirupatitemple

    திருமலை:

    திருப்பதியில் தினமும் 30 முதல் 34 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலைமுடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருமலையில் இதற்காக 18 இடங்களில் கல்யாண கட்டா உள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் தலைமுடியை ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் இ-டெண்டர்கள் மூலம் ஏலம் விடுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.11 முதல் 12 கோடி வரை தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்துவோருக்கு, அங்கேயே குளிக்கவும், உடை மாற்றும் அறைகளையும் தேவஸ்தானம் கட்டிக் கொடுத்துள்ளது.


    ஆதலால், ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கீழே உட்காருவதால் சங்கடமாக உள்ளதாகவும், குறிப்பாக, மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியோர், பெண்கள் ஆகியோர் கீழே உட்கார்ந்து தலைமுடி காணிக்கை செலுத்த சங்கடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கல்யாண கட்டாவில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதியோர், மாற்று திறனாளிகளுக்காக நாற்காலி வசதி செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, நேற்று முதல் கல்யாண கட்டாவில் நாற்காலி வசதி அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்படும் என புட்டா சுதாகர் யாதவ் உறுதியளித்தார்.

    தற்போது ஒவ்வொரு கல்யாண கட்டாவிலும் 5 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.  #tirupatitemple

    ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் தரிசனம் முடித்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். #APSpecialStatus #APBandh
    திருமலை:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திர மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், மக்களின் நிலைமையை மாற்ற வேண்டும் என ஆந்திர சட்டசபையில் பலமுறை பேச முயன்றார். ஆனால் அவரை பேச விடாமல் மறுத்தனர். இதனை கண்டித்தும் சந்திரபாபு நாயுடு, தேர்தலின்போது மக்களுக்கு இலவச வீட்டுமனை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, சொந்த வீடு, இலவச மின்சாரம், இலவச வேளாண்மைக் கருவிகள் வழங்குவதாக கூறினார். ஆனால் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேறவில்லை.

    இதனை கண்டித்தும் மாநில அளவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    அதன்படி இன்று முழு அடைப்பு நடந்தது. திருப்பதி, சித்தூரில் பஸ், ஆட்டோ, வேன், கார்கள் ஓட வில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடாததால் முக்கிய வீதிகள், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. திருமலையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.

    தரிசனம் முடித்த பக்தர்கள் திருமலையில் இருந்து திருப்பதிக்கு பஸ்களில் வந்தனர். ஆனால் திருப்பதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வேலூர், சென்னை உள்பட தமிழகத்தில் இருந்த வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இதனால் திருப்பதியில் இருந்து தமிழக பக்தர்கள் ரெயில்களில் ஊருக்கு திரும்பினர். இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

    ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாஸ்கர ரெட்டி, சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூரில் இருந்து திருப்பதி, சித்தூர், கே.ஜி.எப்., மதனபல்லி, குப்பம் செல்லும் பஸ்கள் ஓடவில்லை.



    ஆந்திரா செல்லும் 32 தமிழக அரசு பஸ்கள், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 46 ஆந்திர பஸ்கள், 32 தனியார் பஸ்கள் பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு பிறகு ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆந்திரா செல்லும் கார், வேன் உள்பட வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. #APSpecialStatus #APBandh

    ×