search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Ayya Vaikunder Avatar Pathi"

    • அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழா.
    • அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192-வது ஆண்டு அவதார தின விழா நேற்று தொடங்கியது.

    வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று வரை 2 நாட்கள் விழா நடைபெற்றது. முன்னதாக செயலாளர் பொன்னுதுரை வரவேற்றார்.

    விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.

    தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, இரவு அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை, துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இரவு சிவசந்திரன் வழங்கிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.

     2-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல், 6.28 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வள்ளியூர் அய்யாவழி அகிலதிருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், துணைத் தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால் நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை தலைவர் பால்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை,அன்ன தர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து வருகின்றனர்.

    ×