search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat to kill"

    திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது28). பெயிண்டர். இவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நடுவில் டீப்ளான் (22) மற்றொரு வாலிபர் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அருள்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் வாலிபர் டீப்ளானை தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து டீப்ளான் தனது நண்பர்களான இளங்கோ நகரை சேர்ந்த ஆனந்த், உழவர்கரையை சேர்ந்த விக்னேஷ் (19), திப்புராயப்பேட்டையை சேர்ந்த ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோருடன் அருள்ராஜியின் வீட்டுக்கு சென்றார். பின்பு அவர்கள் அங்கு இருந்த அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அருள்ராஜ் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, பெரியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஆனந்த், விக்னேஷ், ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட டீப்ளானை போலீசார் தேடி வருகின்றனர்.

    மடுகரையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    புதுவை மடுகரையை அடுத்த தமிழக பகுதியான சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவர், அங்குள்ள பட்டு புடவை ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மடுகரை பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்த போது, இவருக்கும், மடுகரையை சேர்ந்த உமாநாத் (31) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மூர்த்தி மடுகரை சிவன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது உமாநாத் மற்றும் அவரது நண்பர் ஆனந்த பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து மூர்த்தியை வழிமடக்கி தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து மூர்த்தி மடுகரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து உமாநாத்தை கைது செய்தார். அவரது நண்பர் ஆனந்த பாஸ்கரை தேடி வருகிறார்.

    ×