என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல்- 3 வாலிபர்கள் கைது

புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது28). பெயிண்டர். இவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நடுவில் டீப்ளான் (22) மற்றொரு வாலிபர் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அருள்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் வாலிபர் டீப்ளானை தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து டீப்ளான் தனது நண்பர்களான இளங்கோ நகரை சேர்ந்த ஆனந்த், உழவர்கரையை சேர்ந்த விக்னேஷ் (19), திப்புராயப்பேட்டையை சேர்ந்த ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோருடன் அருள்ராஜியின் வீட்டுக்கு சென்றார். பின்பு அவர்கள் அங்கு இருந்த அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அருள்ராஜ் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, பெரியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஆனந்த், விக்னேஷ், ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட டீப்ளானை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
