search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Flood"

    • கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது.
    • சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லையில் வெள்ளம் சற்றே தணிந்திருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் மீள பல நாட்கள் ஆனது. 6 நாட்களுக்கு பிறகு நான் அங்கு சென்றபோது பிரதான 2 சாலைகளை தவிர மற்ற சாலைகளை பயன்படுத்த முடியவில்லை.


    சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இரண்டே நாட்களில் அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் தூத்துக்குடிக்கு அப்படி எதையும் செய்யவில்லை. நான் அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். தூத்துக்குடிக்கு ஏதாவது உதவிகள் செய்யுங்கள் என்று. காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியம். இதனை வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

    கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது. அதுபோன்ற திட்டங்கள் அவருக்கு பின்னர் யாரும் செயல்படுத்த முன்வரவில்லை. எனவே மீண்டும் அது போன்ற திட்டங்களை கொண்டுவர ஒன்றாக சேர்ந்து நாம் ஆளுவோம்.

    மற்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து விட்டோம். போதும், 5 ஆண்டு காலம் நாம் ஆண்டு பார்ப்போம். சரியில்லை என்றால் ஒதுங்கிவிடுவோம். அமைதியான முறையில் வளர்ச்சியை அடைய வாய்ப்பு தாருங்கள். சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×