search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thistles"

    குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து புதர்கள் போல காட்சி அளித்தன. எனவே அங்கு குவிந்து நிற்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ரெட்கிராஸ் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்காக, நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் முயற்சிகளை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் நகராட்சி ஊழியர்கள் அங்கு உள்ள முட்புதகர்களை வெட்டி அகற்றி சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன், 25-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கீதா மற்றும் வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
    • கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை.

    காங்கேயம் :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில், மூலனூர், காங்கேயத்தின் சில பகுதிகள் வரை பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கியது.

    இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகிறது. ஆற்றின் இருகரைகள் மற்றும் ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதனால் நீரோட்டம் தடைப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை. ஆகவே கடைமடை பகுதியில் இருந்து தூர் வாரும் பணியினை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×