என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    அமராவதி ஆற்றில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

    • ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
    • கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை.

    காங்கேயம் :

    உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக வெள்ளக்கோவில், மூலனூர், காங்கேயத்தின் சில பகுதிகள் வரை பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கியது.

    இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகிறது. ஆற்றின் இருகரைகள் மற்றும் ஆற்றின் மேடான பகுதிகளில், செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. அதனால் நீரோட்டம் தடைப்படுகிறது. கடைமடை பகுதிகளுக்கு வந்து சேர வேண்டிய நீர் சரிவர சேர்வதில்லை. ஆகவே கடைமடை பகுதியில் இருந்து தூர் வாரும் பணியினை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×