search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruchuzhi"

    • திருச்சுழி அருகே 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி பசுமடத்தெருவை சேர்ந்தவர் சிவ நாராயணன். இவரது மகன் அருண்குமார் (வயது 24). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அடிக்கடி பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் சிவனாராயணனின் பென்ஷன் பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் சிவநாராயணன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரர் பழனிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. சமீப காலமாக இவர் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சமுதாய கூடம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணியனின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×