என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "the beautiful"
- அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புதியதாக திருப்பணிகள் நடைபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 12-ம் ஆண்டு நிறைவ டைந்ததை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ராமேஸ்வரம் பவானி கூடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் ஆகியவைகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அனைத்து வேலைகளும் நன்மையாக நடைபெற வேண்டி ஆனந்த விநாயகர் யாகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜைகள், துவார பூஜை பலவித திரவியங்கள், கனிவகைகள் யாக பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நேற்று காலை கும்பாபிஷேகம் நடை–பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்