search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thane court"

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தானே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #rahulgandhi #defamationcase
    தானே:

    மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கொன்று விட்டது என கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த முறை ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #RSS #rahulgandhi #defamationcase
    ×