என் மலர்
நீங்கள் தேடியது "terrorist Arrested"
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆலந்தூர்:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரியா. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தெலுங்கானா போலீசாரும், அம்மாநிலத்தில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஜக்ரியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜக்ரியா வெளிமாநிலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஜக்ரியா அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது பின்னணி தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜக்ரியாவின் பாகிஸ்தான் பின்னணி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது தீவிரவாதி பக்கிர், குஜராத் மாநிலம் பரூச்சில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது நடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, பக்கிர் கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலைமறைவாக வசித்து வந்ததும், இந்திய முகவரியில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்தது. பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






