search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Bill"

    • பத்ரகாளிஅம்மன்கோவிலின்தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்
    • இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோதுஇரும்பு உண்டியலைஉடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் பத்ரகாளிஅம்மன் கோவில். உள்ளது.இந்த கோவிலின் தர்மகத்தா கார்த்திகேயன் நேற்று இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது கோவில் முன் பகுதியில் சிமெண்ட் தரையில் புதைத்து வைக்கபட்டிருந்த இரும்பு உண்டியலையாரோ மர்ம நபர்கள் இரவு கடப்பாரையால் குத்தி உடைக்க முயற்சி செய்ததும், அதனை உடைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டதும் தெரிய வந்தது. கோவிலில் இருந்த பொருட்கள் ஏதும் திருட்டு போகவில்லை.

    இது குறித்து இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பபட்டது.
    • விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக கோயில்களில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளைய டிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் செம்பனார்கோயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயில், மணக்குடி பொறையன் கோயிலில் உள்ள உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைய டிக்கப்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட தனிப்படைப்பு போலீசார் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உண்டியல் கொள்ளை போன கோயில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கீழப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன்கள் வடிவேலு (24) பாபு (23) ஆகிய இருவரும் சேர்ந்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    உடனடியாக இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    . விசாரணையில் அண்ணன்- தம்பி இருவரும் சேர்ந்து மாவட்டத்தில் உள்ள 10 மேற்பட்ட கோவில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து 4000 ரொக்க பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.
    • மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜை முடிந்து நேற்றிரவு கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. உடனே சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உண்டியலை தேடினர்.

    அப்போது மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    அதனை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. மூலம் தேடி வருகின்றனர்.

    ×