search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana MLA"

    • வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.
    • சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிக்குடு வம்சி கிருஷ்ணா. டாக்டரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் வயிற்றில் உள்ள கட்டியால் மன உளைச்சல் மற்றும் உடல் நல கோளாறால் அவதி அடைந்து வருவதை அறிந்தார்.

    இதையடுத்து நாகர்கர்னூல் மாவட்டம் பலமூரில் பாதிக்கப்பட்ட பெண் அனிதாவை அச்சம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டாக கட்டியுடன் அவதிப்படுவதாக டாக்டரிடம் தெரிவித்தார்.

    அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிக்குடு வம்சி கிருஷ்ணா தலைமையிலான டாக்டர் குழுவினர் அனிதாவின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.

    அனிதாவின் உயிரை காப்பாற்றியதற்கு அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், டாக்டருமான சிக்குடு வம்சி கிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

    தெலுங்கானாவில் பசு பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்காததால் பாஜக எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது சலசலப்பை உருவாக்கி உள்ளது. #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் கோஷமகால் சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் ராஜா சிங் லோத் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார். அதில், பசு பாதுகாப்புக்கு கட்சி தலைமை உரிய ஆதரவு தராததால் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகவும், மாநில பாஜக தலைவர் லட்சுமணனிடம் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    ‘என்னைப் பொருத்தவரை இந்து தர்மம் மற்றும் பசு பாதுகாப்பு ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பேன். அதன்பிறகுதான் அரசியல். பசு பாதுகாப்பிற்பிற்காக இப்போது பாஜகவில் இருந்து விலகியிருக்கிறேன்.

    பசு பாதுகாப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை பிரச்சனை எழுப்பினேன். ஆனால் கட்சி எனக்கு எந்த ஆதரவும் தரவில்லை.  இனி நானும், எனது குழுவினரும் (பசு பாதுகாவலர்கள்) தெருவில் இறங்கி போராடுவோம். பசு பாதுகாப்பிற்காக எதையும் செய்வோம்’ என்றும் ராஜா சிங் லோத் கூறியுள்ளார்.

    பாஜகவுக்கு மேற்கொண்டு எந்த தொந்தரவும் கொடுக்க விரும்பாததால், ராஜினாமா செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CowProtection #BJPMLAResigns #TelanganaBJPMLA
    ×