என் மலர்
நீங்கள் தேடியது "Tamil people protest"
- நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகே நேற்று கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் ஷோரனூர் பகுதியில் ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரெயில் மோதியதால் தமிழ்நாட்டைச் சேர்ந்து துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #ModimeetsMahathir #PMModi #SterliteProtest
கோலாலம்பூர்:
இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினர்.

மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். #ModimeetsMahathir #PMModi #SterliteProtest






